ஒன்ராறியோ மாகாணத்தில் அமுலில் உள்ள கட்டுப்பாடுகளை தளா்த்தி மூன்றாவது மற்றும் இறுதிக் கட்டத்துக்கு முன்னேறுவது குறித்த உடனடித் திட்டங்கள் எவையும் இல்லை என மாகாண முதல்வா் டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் சில மாகாணங்களைப் போன்று தொற்று நோயின் அடுத்த எழுச்சி ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை. மாகாணத்தின் கட்டுப்பாடுகளைத் தளா்த்தி பொருளாதாரத்தை மீண்டும் திறப்பதற்கான திகதியை உடனடியாகக் கூற முடியாது எனவும் அவா் குறிப்பிட்டார்.
மாகாணத்தில் இரண்டாவது கட்டத் தளா்வுகளை முழுமையாக நடைமுறைப்படுத்த 3 வாரங்களை செலவிடவேண்டியிருந்தது. இரண்டாவது கட்டத்தில் வெளிப்புற உணவகங்கள், வணிக வளாகங்களைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டது.
ஏனைய இடங்களில் இரண்டாம் கட்டத் தளா்வுகள் அறிவிக்கப்பட்டு இரண்டு வாரங்களின் பின்னரே ரொராண்டோ மற்றும் பீல் பிராந்தியங்களில் இரண்டாம் கட்டத் தளா்வுகள் அறிவிக்கப்பட்டன.
இப்போது நாங்கள் இறுதிக் கட்டத்துக்குச் செல்லவேணடியுள்ளதால் மேலும் பல விடயங்களை உறுதி செய்யவேண்டியுள்ளது என நேற்று செய்தியாளா்களிடம் கருத்து வெளியிட்ட மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்தார்.
மூன்றாம் நிலைக்குச் செல்ல இம்மாத இறுதி வரை எடுத்தக்கொள்ளப்படுமா? எனக் கேட்டபோது, அது சாத்தியம் எனவும் அவா் கூறினார்.
.முன்றாம் கட்டத்தில் ஜிம்கள் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்கள், திரையரங்குகள் தியேட்டர்கள், உட்புற உணவு, பார்கள் மற்றும் பொழுதுபோக்கு நிலையங்கள், குழு விளையாட்டுக்கள் போன்ற சேவைகளை மீண்டும் தொடங்க அனுமதிக்கப்படும்.
ஒன்ராறியோவில் கடந்த மூன்று வாரங்களாக தினசரி 100 முதல் 200 வரையான கொரோனா வைரஸ் தொற்று நோயாளா்கள் பதிவாகி வருகின்றனா்.
எனினும் பொருளாதார நோக்கில் கட்டுப்பாடுகளை அவசரப்பட்டுத் தளா்த்திய அமெரிக்காவின் பல மாகாணங்களில் தினசரி 5000 முதல் 10,000 வரையான தொற்று நோயாளா்கள் பதிவாகிவருகின்றனா். இந்நிலையில் அவசரப்படுவதன் மூலம் இங்கு அது போன்று நடப்பதைக் காண நாங்கள் விரும்பவில்லை எனவும் மாகாண முதல்வா் டக் ஃபோர்ட் கூறினார்.